Print this page

சர்வஜன வாக்கெடுப்புக்கு பூர்ண ஆதரவு

February 12, 2024

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரு கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும், அதன் பின்னர் பிரேரணையை சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.