Print this page

அமைச்சர் சுசில் எடுத்துள்ள அதிரடி முடிவு

February 15, 2024

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் எந்த ஒருவரின் பெயரையும் பாடசாலைகளுக்கு பெயர் வைக்க பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேம்ஜயந்த தெரிவித்தார்