Print this page

கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டு அறிமுகம்

புதிய கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தற்போதுள்ள டிக்கெட்டையும் விட பத்து ரூபய் மேலதிக செலவை ஏற்க நேரிடுவதாக ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய டிக்கெட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.