Print this page

வெலிக்கடையில் துப்பாக்கிச் சூடு

February 20, 2024

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (19) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது மாடியில் நேற்று இரவு 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுடுவதற்கு ரிவால்வர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Last modified on Tuesday, 20 February 2024 03:18