Print this page

கூட்டணி பணிகள் மீள ஆரம்பம்

February 21, 2024

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முனைப்புடன் கட்டியெழுப்பி வந்த கூட்டணியின் பணிகள் மீண்டும் விரைவுபடுத்தத் தொடங்கியுள்ளதாக அந்தக் குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அதன் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தலைமைத்துவ சபை அறிவிப்பில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால், தற்போது முடிவடைய வேண்டிய கூட்டணியின் துவக்கமும் தாமதமானது.

எவ்வாறாயினும், தற்போது அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.