Print this page

நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி நேரில் வாழ்த்து

நரேந்திர மோடியின் இரண்டாவது தடவை பதவிப்பிரமாண வைபவம், புதுடில்லி நகரின் ராஷ்டரபதி பவனில் மிக கோலாகலமாக இடம்பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.

இரண்டாவது முறையாகவும் அந்நாட்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.