Print this page

கோள் மண்டலம் மூடப்பட்டுள்ளது - சுற்றுலா செல்ல வேண்டாம்

February 27, 2024

இலங்கை கோள் மண்டலத்தை இன்று முதல் சில நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (27ம் திகதி) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோள் மண்டலம் மூடப்படும்.

அன்றைய தினங்களில் பொதுக் கண்காட்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோள் மண்டலத்தின் புரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக  இதனை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.