Print this page

சிக்கலில் மத்திய வங்கி அதிகாரிகள்!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 5ம் திகதி காலை 10.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் நடக்கிறது. அதற்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.