Print this page

வெடிப்பு சம்பவதத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - பலாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவதத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாலி இராணுவ முகாமுக்கு அருகில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரே நேற்று மாலை இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

யுத்தக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருள் மீது இராணுவ சிப்பாய் ஒருவர் காலை பதித்தமையினால், குறித்த வெடிப்பொருள் வெடித்துள்ளது.