Print this page

நாட்டில் தலைதூக்கும் எயிட்ஸ்

கடந்த வருடத்தை விட இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய STD மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் பாதுகாப்பு அற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 29 March 2024 05:18