Print this page

நாமலுக்கு பதவி வழங்கியதால் அதிருப்தி அடைந்த மொட்டு சிரேஷ்ட எம்பிக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொஹொட்டுவ தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமை தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு பெரும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

அங்கு பசில் ராஜபக்ஷ பதவியேற்காமல் கட்சியின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த சிரேஷ்ட எம்.பி.க்கள் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சுயாதீனமாக ஆதரவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.