Print this page

முற்றாக ஒழிக்கும் வரை நிறுத்த மாட்டோம்

தேசபந்து தென்னகோன் தலைமையில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நீதி நடவடிக்கையானது பாதாள உலகமும் போதைப்பொருளும் நாட்டிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட பின்னரே முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

திட்டமிட்ட குற்றக் கும்பலுடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்த நடவடிக்கையை பாதியில் நிறுத்தினால் நாடு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பலாம் எனவே சரியான புரிதலுடன் இதனை கையாள்வோம் என்றார்.