Print this page

அரச அதிகாரிகள் சிலருக்கு மேலதிக கொடுப்பனவு

பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் இம்மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், உதவி பணிப்பாளர், கணக்காளர் ஆகிய பதவிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும்.

அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.