Print this page

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய மோசமான நிலை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்காத ஒருவருக்கு பதில் தலைவர் பதவி வழங்குவதை சட்டங்கள் தடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இது தொடர்பில் நாளை நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் பொலிட்பீரோ தற்போது இரண்டாக பிரிந்து இரு கட்சிகளும் செயல் தலைவர்களை நியமித்துள்ளன.

இரண்டு நியமனங்களும் சட்டவிரோதமானது என இரு தரப்பினரும் குற்றம் சுமத்தியமையும் விசேட அம்சமாகும். 

இதேவேளை, கட்சித் தலைமையகத்தின் செயற்பாடுகளை இரு தரப்பினருக்கும் தடைசெய்து, அனைத்துக் கூட்டங்களும் அதற்கு வெளியில் நடத்தப்பட வேண்டுமென மருதானை பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.