Print this page

ஹரின் வெளியிட்ட சர்ச்சை கருத்து

மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தமக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மே தின அமைப்பாளர் பதவியும் தமக்கு கிடைக்கும் என தெரிவித்த அவர், இந்த மே தினத்தை அனைத்து தரப்பினரும் உயர் மட்டத்தில் கொண்டாடவுள்ளதாக தெரிவித்தார்.

இபோச பஸ்களை பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் சிறிகொத்தில் இருந்து செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உணவு மற்றும் பானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்தவுடன் குடிக்காமல், திரும்பி வரும்போது குடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எதிர்வரும் மே தினக் கூட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.