Print this page

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் VIP வருகை பிரிவில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாயின் துப்பாக்கி வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

04/30 அன்று காலை 10.25 மணியளவில் சிறிலங்கா விமானப்படையின் தலைமை விமானப்படை சிப்பாய் பிடியில் இருந்த T.-56 ரக துப்பாக்கி தவறுதலாக சுடப்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், பணம் செலுத்தி இந்த வசதிகளைப் பெறும் சிறப்பு விஐபி விருந்தினர்கள் மற்றும் உலகின் முன்னணி வர்த்தகர்கள் இந்த முனையத்தின் ஊடாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்கின்றனர்.

தற்போது, இந்த விமானப்படை சிப்பாய் இலங்கை விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும், இலங்கை விமானப்படையினரும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.