Print this page

சஜித்துக்கு அநுரவின் இறுதி அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவரும், சமகி ஜன பலவேகயவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் உத்தேச விவாதத்திற்கான திகதியை வழங்காவிடின், அவர் விவாதத்தில் இருந்து ஓடியவராகவே கருதப்படுவார் என தேசிய ஜன பலவேகயவின் தலைவர் எம்.பி.அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

குறித்த விவாதத்திற்கு முன்னதாக இம்மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளை வழங்கியதாகவும், ஆனால் அதற்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை எனவும், எனவே இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு திகதியையும் தெரிவு செய்ய முடியும் எனவும் திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் எந்த வேலையாக இருந்தாலும் அந்த திகதியில் கலந்து கொள்ள வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவே இறுதி அறிவிப்பு என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.