Print this page

ஆளும் கட்சி எம்பிக்கள் கூட்டம், நாமல் புறக்கணிப்பு

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழு நேற்று (06) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பத்தரமுல்லையில் கூடியது.

அதாவது எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 31 உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இது தவிர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை மற்றும் அரசியல் சபை இன்று (07) காலை கூடவுள்ளது.

கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கட்சியின் புதிய முக்கிய பதவிகள் உருவாக்கப்பட உள்ளது.