Print this page

மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த மாதம் வெளியே வருவார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது அடுத்த மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஹொரண பிரதேசத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொருத்தமான நபர் முன்வைக்கப்படுவார் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.