web log free
April 22, 2025

தேர்தல் திகதி அறிவிப்பால் குழப்பம்!

இந்த நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என்று சொல்லவில்லை.

மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd