Print this page

விசேட இலவச ரயில் சேவை

கட்டணம் இன்றி இலவச சிறப்பு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொசன் போயாவை முன்னிட்டு மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்காக இலவச விசேட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மஹவ - அநுராதபுரம் பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் பணிகள் நிறைவடையாததால் பொசன் காலத்தில் புகையிரத சேவைகளை ஈடுபடுத்த முடியாது எனவும் அதற்கு பதிலாக 400 விசேட பஸ்கள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை புதிய குறுகிய தூர புகையிரத பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், மிஹிந்தலைக்கு வரும் பக்தர்களுக்கு கட்டணமின்றி விசேட புகையிரதத்தை இயக்க தயார் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.