Print this page

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான மனுவை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ தன்னிடமோ அல்லது சட்டத்தரணிகளிடமோ அது தொடர்பில் ஆலோசிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என்பதும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணைக்குழு சரியானது என்பதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.