Print this page

ரணில் - மஹிந்த இடையே இரகசிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (28) மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளதுடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியிடப்படவில்லை.