Print this page

நீதி அமைச்சு ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில்

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜேதாச ராஜபக்ஷவின் கீழிருந்த நீதித்துறை மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அமைச்சர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக புதிய அமைச்சர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் கீழ் அதே பதவி வழங்கப்பட உள்ளதாக மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.