Print this page

இன்று பாராளுமன்றத்தில் ஏற்படப் போகும் மாற்றம்

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ளதால் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிகளின் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதன்படி அடுத்த சில நாட்களில் பல இராஜாங்க அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, அவரும் எதிர்க்கட்சியில் அமர உள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.