Print this page

12 மணிநேர நீர்வெட்டு

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11ஆம் திகதி) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் பேலியகொட, வத்தளை, ஜா அல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், களனி, பயகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட, உள்ளுராட்சி சபை பகுதி மற்றும் கம்பஹா உள்ளுராட்சி சபையின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

Last modified on Saturday, 10 August 2024 02:11