Print this page

ஜனாதிபதியுடன் இணையும் ராஜித்த

சமகி ஜன பலவேக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாளை காலை ஜனாதிபதிக்கு ஆதரவாக ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளார்.

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்திலுள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தியதுடன் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளார்.