Print this page

கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முடிவுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.