Print this page

25000 சம்பள உயர்வு பெறப்போகும் தரப்பு

September 06, 2024

தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 25000 வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகவின் விஞ்ஞாபனத்தில் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கான வலுவான வேலைத்திட்டம் உள்ளதாகவும், இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

தனியார் துறை முதலாளிகளின் செல்வத்தை அதிகரிக்க இந்த தொழிலாளர்களும் சிரமங்களுக்கு மத்தியில் நிறைய வேலை செய்கிறார்கள் என்று அவர் வலியுறுத்தினார்.

பணியிடத்தில் அவர்கள் செய்யும் உன்னதப் பணிகளுக்கு சிறப்புத் திட்டம் உள்ளது, இதன் கீழ் தனியார் துறையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 25000 வரை கொண்டுவருவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்படும் என்றும், ஊழியர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.