Print this page

சமூக ஊடகங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

September 07, 2024

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளைப் பகிரும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இழிவுபடுத்தும் பதிவுகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பல்வேறு போலி கணக்குகள் ஊடாக பதிவிடப்படும் அத்தகைய பதிவுகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் தேர்தல் சட்டத்தின் கீழ் நீங்கள் குற்றவாளியாக இனங்காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.