Print this page

ரணிலின் பாதுகாப்பு குறித்து வெளிவந்த அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது 163 பேர் பாதுகாப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 50 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், 06 உயரடுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழுவொன்றும் அடங்குகின்றனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Last modified on Monday, 07 October 2024 14:07