Print this page

அரசியல் பழிவாங்குதல் என்று அழ வேண்டாம்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திருடர்கள் சட்டரீதியாக பிடிபடுவதாகவும் அரசியல் பழிவாங்கல் இல்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

திருடர்களைப் பிடிக்கத் தொடங்கும் போது அழவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறார்.

அரசாங்கம் பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆவதால், அந்த நேரத்தில் எல்லாவற்றையும் எதிர்பார்க்கக் கூடாது என்கிறார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் போட்டியிடவோ, ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கோ தேவை இல்லை என்றும், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.