Print this page

சந்திரிக்காவின் புலம்பல்..

November 06, 2024

அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக சந்தேகம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி தனது 50 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுவை 30 ஆகக் குறைக்குமாறும், ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 பேர் கொண்ட பாதுகாப்புக் குழுக்கள் இருப்பதாகவும் தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் விடுத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு பாதுகாப்பு அளவுகோல் செய்யப்பட்டது என்பது தனக்கு புதிராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் 5 ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளில் தாம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் என்றும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் தான் என்றும் விடுதலைப் புலிகள் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதாக பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் மூலம் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 63 இராணுவ அதிகாரிகள் மற்றும் 180 பொலிஸ் அதிகாரிகள் 243 பாதுகாப்பு அதிகாரிகள், மைத்திரிபால சிறிசேனவிற்கு 109 பொலிஸ் அதிகாரிகள், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 200 பாதுகாப்பு அதிகாரிகள் 25 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 175 இராணுவ அதிகாரிகள் என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஆனால் தனக்கு 50ல் இருந்து 30 ஆக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதென சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Last modified on Wednesday, 06 November 2024 03:04