Print this page

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு

November 21, 2024

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள் அரிசியின் வெளியீட்டை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளதுடன் ஒருவருக்கு மூன்று கிலோ அரிசியை மாத்திரமே விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒருவருக்கு சம்பா, நாடு, கெக்குலு போன்ற மூன்று கிலோ அரிசி மாத்திரமே விடுவிக்கப்படும் என ஏற்கனவே காட்சிப்படுத்தியிருந்தமை காணப்பட்டது.