Print this page

மின்சார சபை ஊழியர்களின் போனஸ் குறித்து முன்னாள் அமைச்சர் கருத்து

November 29, 2024

மின்சார சபைக்கு இலாபம் வந்தாலும் நட்டமானாலும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் முறையை மாற்றியமைத்ததாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்களின் வினைத்திறன் மற்றும் அவர்கள் தாங்கும் இடர் ஆகியவற்றின் அடிப்படையில் போனஸ் வழங்கும் முறைமையொன்றை தயார் செய்துள்ளதாகவும் அமைச்சரவை அங்கீகாரத்தையும் பெற்றுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ரஞ்சன் ஜெயலால் கூறியது போல், அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக போனஸ் வழங்க முடியாது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

வருடத்தில் 365 நாட்களும் தொழிற்சங்க செயற்பாடுகளுக்காக இருப்பதால், வேலையில்லாத ஒருவருக்கு போனஸ் வழங்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

செப்டம்பரில் செய்திருக்க வேண்டிய மின்கட்டணத்தை போனஸ் செலுத்தும் முன் திருத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தொகையுடன் அதிக லாபம் காட்டலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

தனியார் வானொலி ஒன்றுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட காஞ்சனா விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.