Print this page

நாட்டை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது

December 01, 2024

76 வருடங்களாக சிதைந்து போன நாட்டை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தி வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் 90 வினாடிகளுக்கு அவரது அமைச்சு ரூ. 1740 இலட்சம் செலவழிக்கப்பட்டதாகவும் இன்னும் விளம்பரம் வெளியிடப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பணம் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டதா அல்லது வேறு எங்காவது சென்றதா என்பது எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றார். 

இந்த நாட்டில் தேவையற்ற விடயங்களை வீண்விரயம் செய்வதை நிறுத்துவதன் மூலம் நாடு சுத்தப்படுத்தப்படும் எனவும் அதனை ஒரே நாளில் எதிர்பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.