Print this page

எரிபொருள் விலை குறித்து வெளியான புதிய தகவல்

December 03, 2024

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தில் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

விலைக் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும் மற்றும் வரிகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தரமாக தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.