Print this page

தேங்காய் விலை தொடர்ந்தும் உயர்வு

December 05, 2024

பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களிலும் ஒரு தேங்காய் 160 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

தேங்காய் கையிருப்பில் இல்லாததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கொழும்பின் சில பகுதிகளில் தேங்காய் பாரி ஒன்று 100-120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் விலை தொடர்ந்து உயரும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளது.