Print this page

புதிய சபாநாயகர் விரைவில்

December 15, 2024

கடந்த 17ஆம் திகதி அசோக ரங்வால ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக இருந்த சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இது நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அசோக ரங்வலவினால் பதவி விலகும் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார்.

பின்னர், அரசியல் சாசனப்படி, எம்பிக்களின் தீர்மானங்கள் உறுதி செய்யப்பட்ட பின், சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும்.