Print this page

நாட்டில் புது அரசியல் கலாசாரம்

December 15, 2024

இந்த நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால் தான் சபாநாயகர் அசோக ரன்வல தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் தனது தகுதிகளை உறுதி செய்வதாக வலியுறுத்திய அமைச்சர் ஜயதிஸ்ஸ, தற்போது அவ்வாறு செய்ய முடியாததால் தார்மீக ரீதியில் பதவி விலகியுள்ளார்.

இவ்வாறானதொரு அரசியல் பொறுப்புக்கூறல் வரலாற்றில் இடம்பெற்றதில்லை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிடுகின்றார்.