Print this page

புதிய சபாநாயகர் கலாநிதி ஜகத்!

December 16, 2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிருவாகியாக பணியாற்றிய விக்கிரமரத்ன, பொலன்னறுவை கல் அமுனா மகா கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவராவார்.

தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட விருப்பு பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்ற விக்கிரமரத்ன 51391 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அசோக ரன்வல ராஜினாமா செய்ததால் சபாநாயகர் பதவி வெற்றிடமானது.

அதன்படி, இலங்கையின் 23வது சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நியமிக்கப்பட உள்ளார்.

Last modified on Monday, 16 December 2024 03:21