Print this page

ஜகத் விக்ரமரத்ன சபாநாயகர் உறுதி

December 17, 2024

இன்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய சபாநாயகர் பதவிக்கான முன்மொழிவு பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டதுடன், சபைத்தலைவர் பிமல் ரத்நாயக்க அதனை உறுதிப்படுத்தினார்.

10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட  அசோக ரங்வல ராஜினாமா செய்ததையடுத்து, சபாநாயகர் பதவி வெற்றிடமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.