எரிபொருள் வரிசைப்படுத்தல் மற்றும் விநியோக செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி இலத்திரனியல் சாதனம் (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் நாடு முழுவதும் முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
உலகம் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இலங்கையை விட்டு வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு ஏற்றவாறு எந்தவொரு நிரப்பு நிலையத்தையும் அல்லது நிறுவனத்தையும் ஆதரிக்கிறார்.
மேலும், இலத்திரனியல் முறையின் ஊடாக எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பெற்றோலிய மொத்த விற்பனை நிலையம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆகிய இரண்டினதும் செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட்டு இலகுவாகியுள்ளதாக கலாநிதி மயூர நெத்திகுமார மேலும் தெரிவிக்கின்றார்.