Print this page

அநுர கொலை சதி! விசாரணை தொடர்கிறது

December 21, 2024

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரகசிய பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டியில் உள்ள முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.