Print this page

தனியார் வகுப்புகளை நடத்த கட்டுப்பாடு

December 22, 2024

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார் வகுப்புகளுக்கு கற்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றறிக்கையில் தங்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரம் முடிந்த பிறகு அல்லது வார விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல்வேறு வெளி இடங்களில் பணம் வசூலித்து கூடுதல் வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.