தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் குழுவிற்கு மட்டும் கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
வரிய குழந்தைகளுக்கும், அஸ்வேசும சலுகைகள் இல்லாத குழந்தைகளுக்கும் ரூ.6,000 உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 06 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டு செயலாளர் மங்கள மத்துமகே தெரிவித்துள்ளார்.