Print this page

சீன மக்கள் குடியரசின் மானியமாக 1888 வீடுகள் இலங்கை மக்களுக்கு

December 28, 2024

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்க சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சீன மக்கள் குடியரசின் மானியமாக 1888 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதற்காக 22 பில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், இத்திட்டத்தின் முதற்கட்டமாக மொரட்டுவ ராவத்தவத்த பிரதேசத்தில் 575 வீடுகளும் கொட்டாவ பிரதேசத்தில் கலைஞர்களுக்காக 108 வீடுகளும் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக தெமட்டகொட திட்டத்தில் 586 வீடுகளும் மஹரகம திட்டத்தில் 112 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மூன்றாம் கட்டமாக பேலியகொட பிரதேசத்தில் 615 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட 5 இடங்களில் ஆரம்பிக்கப்படும் இந்த வீட்டுத் திட்டம் 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நீடித்த உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.