Print this page

பணியை தொடங்கிய ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (3) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகோட்டையிலும், கொழும்பு மால் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்திலும் புத்தாண்டை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அரச அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு பாரம்பரிய விளக்குகளை ஏற்றி வைத்த முன்னாள் ஜனாதிபதி கேக் மற்றும் பால் சாதம் விருந்திலும் கலந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான இரண்டு வார விஜயத்தின் பின்னர் நேற்று இரவு நாடு திரும்பினார்.