Print this page

ஜனாதிபதி செலவு 50% குறைப்பு

February 03, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அடுத்த பட்ஜெட்டில் ஜனாதிபதியின் செலவுகள் ஐம்பது சதவீதம் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

அதன்படி, மக்களுக்கு சுமையாக இல்லாத அரசாங்கத்தை உருவாக்குவதே நோக்கம் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 இந்த மண்ணில் மீண்டும் இனவாதத்திற்கோ அல்லது மதவாதத்திற்கோ இடமில்லை என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.