Print this page

அனைத்துக்கும் கடந்த அரசாங்கமே காரணம்

February 07, 2025

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு காரணம், கடந்த அரசாங்கம் தேங்காய் சாகுபடியை முறையாகப் பராமரிக்காததே என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறுகிறார்.

இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குள் தேங்காய் நெருக்கடி ஏற்பட்டால், அதற்கு தனது அரசாங்கமே பொறுப்பேற்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

உலகில் எங்கும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்குள் காய்க்கும் எந்த தென்னை மரமும் இருப்பதாக தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு முதல் அரசாங்க தென்னை நிலங்களுக்கு உரம் இடப்படவில்லை என்றும், முந்தைய ஆட்சியாளர்கள் தென்னை நிலங்களைப் பிரித்து விற்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இவை அனைத்தினாலும் தற்போது தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.